'டாப் கியரில்' செல்லும் மின்சார வாகன விற்பனை - என்ன காரணம்?

'டாப் கியரில்' செல்லும் மின்சார வாகன விற்பனை - என்ன காரணம்?
'டாப் கியரில்' செல்லும் மின்சார வாகன விற்பனை - என்ன காரணம்?

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மின்சார வாகனங்களின் விற்பனையும் வேகமாக உயர்ந்து வருகிறது

பெட்ரோல், டீசலை விட மின்சார வாகனங்களுக்கான பயன்பாட்டு செலவு குறைவாக இருப்பதால் அவற்றுக்கு உலகெங்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் மிகவும் குறைவு என்பதால் மின்சார வாகன பயன்பாட்டை அரசுகளும் ஊக்குவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

2019-20ஆம் ஆண்டில் 24 ஆயிரத்து 843 ஆக இருந்த மின்சார இரு சக்கர வாகன விற்பனை 2020-21இல் 41 ஆயிரத்து 46 ஆக அதிகரித்தது. கடந்த 2021-22 நிதியாண்டில் இது 5 மடங்கு அதிகரித்து 2 லட்சத்து 31 ஆயிரத்து 338 ஆக இருந்தது. இதே போல மின்சார ஆட்டோக்கள் விற்பனை 2019-20இல் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 684 ஆகவும் 2020-21இல் 88 ஆயிரத்து 391 ஆகவும் இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 874 ஆக அதிகரித்தது.

மின்சார கார்கள் விற்பனை 2019-20ஆம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 280 ஆகவும் 2020-21இல் 4 ஆயிரத்து 984 ஆகவும் இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் இது 17 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது மின்சாரத்தில் இயங்கும் சரக்கு வாகனங்கள் விற்பனை 493, 400, 2 ஆயிரத்து 203 என ஒவ்வொரு நிதியாண்டும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பால் அத்துறையிலும் களமிறங்க முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com