ஜிஎஸ்டியால் சாலையோர உணவகங்களில் கூட்டம் அதிகரிப்பு

ஜிஎஸ்டியால் சாலையோர உணவகங்களில் கூட்டம் அதிகரிப்பு

ஜிஎஸ்டியால் சாலையோர உணவகங்களில் கூட்டம் அதிகரிப்பு
Published on

ஜிஎஸ்டி வரி விதிப்பால் உயர்தர உணவகங்களில் கூட்டம் குறைந்து சாலையோர உணவகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சென்னை போன்ற நகரங்களில் பணிபுரியும் வெளியூர்வாசிகள் பலரும் தங்கள் உணவு தேவைக்கு ஓட்டல்களையே நம்பியுள்ளனர். ஆனால் அண்மையில் அறிமுகமான ஜிஎஸ்டி வரியால் உணவகங்களில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பலரும் கவலை அடைந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாத வருமானத்தை நம்பி வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் பலரும் உயர்தர உணவகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் அன்றாட செலவினங்களில் உணவுக்கு மட்டுமே பெரும் தொகை செலவிட வேண்டிய சூழலில் குறைந்த விலையுள்ள சாலையோர உணவகங்களையே மக்கள் நாடுகின்றனர். இதனால் உயர்தர உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து சாலையோர உணவகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com