மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ள சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்...!

மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ள சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்...!
மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ள சென்னை  ரிச்சி ஸ்ட்ரீட்...!

எலக்ட்ரானிக்ஸ் சந்தை மையமான சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.

டெல்லியில் உள்ள நேரு அரண்மனைக்குப் பிறகு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான 2-வது பெரிய சந்தை சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட்தான். கம்ப்யூட்டர்களுக்கான சாதனங்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சந்தையாக சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் திகழ்கிறது.

இந்த தெருக்களில் சிறிய கடைகள் முதல் பெரிய எலக்ட்ரானிக் கடைகள் வரை எண்ணற்ற கடைகள் உள்ளன. மேலும் இங்கு மலிவான விலையில் நல்ல தரமான பல எலக்ட்ரானிக் சாதனங்கள் கிடைக்கும். இதனாலேயே நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னை வருபவர்கள் கூட இந்த தெருவை கடக்காமல் செல்ல மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த ரிச்சி ஸ்ட்ரீட் தற்போது மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com