பட்ஜெட் தாக்கம்: ஸ்மார்ட்போன்கள் விலை உயருகிறது

பட்ஜெட் தாக்கம்: ஸ்மார்ட்போன்கள் விலை உயருகிறது

பட்ஜெட் தாக்கம்: ஸ்மார்ட்போன்கள் விலை உயருகிறது
Published on

மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்படும் சர்க்யூட் போர்டுகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் பிரிண்டட் சர்க்யூர்ட் போர்டுகளுக்கு (PCB) 2 சதவீத கூடுதல் வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். ஸ்மார்ட்போன் உற்பத்தி செலவில் இந்த போர்டுகளின் செலவு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் ஆகும். உள்நாட்டு பிசிபி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். இன்றைய சூழலில் இந்திய சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள பிசிபிக்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவையே. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com