ஏப்ரல் 1 வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ஏப்ரல் 1 வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ஏப்ரல் 1 வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை
Published on

நிதியாண்டு முடிவதையொட்டி நாளை (மார்ச் 26) முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

2016-17 நிதியாண்டு முடிவதால் பொதுமக்கள் வரி செலுத்துவது உள்ளிட்ட அரசு சார்ந்த வங்கி சேவைகளை எளிதாக்கும்வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியார் என வங்கி சேவைகளை வழங்கும் அனைத்து வங்கிகளும் இந்த உத்தரவினைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையில் ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளைகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com