"சந்தாதாரர்கள் அதிக பணம் செலுத்த தயாராக இருங்கள்"-ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்

"சந்தாதாரர்கள் அதிக பணம் செலுத்த தயாராக இருங்கள்"-ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்
"சந்தாதாரர்கள் அதிக பணம் செலுத்த தயாராக இருங்கள்"-ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்

சந்தாதாரர்கள் அதிக பணம் செலுத்த தயாராக இருங்கள் என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் தற்போது 16 ஜிபி டேட்டாவை 160 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இனி இந்த தொகைக்கு 1.6 ஜிபி டேட்டாவை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெறமுடியும். ஏர்டெல் நிறுவனத்தில் குறைந்தபட்ச திட்டமாக உள்ள 45 ரூபாயை, இனி வரும் காலங்களில் 100 ரூபாயாக மாற்றவும் ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்ந்த அகில் குப்தாவின் புத்தக வெளீயீட்டு விழாவில் பேசிய சுனில் மிட்டல் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சந்தாதாரரிடம் இருந்தும் சராசரியாக 300 ரூபாய் பிளான் தொகையாக பெற்றால் மட்டுமே நிறுவனத்தின் நிலைத்த தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com