ஏர்டெல்லின் அடுத்த அதிரடி: 100% கேஷ்பேக்

ஏர்டெல்லின் அடுத்த அதிரடி: 100% கேஷ்பேக்
ஏர்டெல்லின் அடுத்த அதிரடி: 100% கேஷ்பேக்

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு 100% சதவீத கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.  

தீபாவளிக்கு சிறப்பு அறிவிப்பாக ரிலையன்ஸ் ஜியோ ‘தண் தணா தண்’ சலுகையில் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100% கேஷ்பேக்கை அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் ரூ.349 சலுகையின் கீழ் மை ஏர்டெல் செயலி மூலம் ஏர்டெல் பேமென்ட் பேங்கில் ரீசார்ஜ் செய்யும் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் பேமென்ட் பேங்க் கணக்கில் 100% கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதே கணக்கில் அடுத்த ஆறு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி கணக்கில் ஏழு மாதங்களில் ரூ.350 கேஷ்பேக் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் ரீசார்ஜ் செய்த 3 நாட்களுக்குள் கேஷ்பேக் தொகை ஏர்டெல் பேமென்ட் பேங்க் வேலெட் மற்றும் சேமிப்பு கணக்கில் சேர்ந்து விடும் என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. 28 நாட்கள் செயல்படும் இந்த ரூ.349 ஏர்டெல் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்,100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 ஜிபி டேட்டா ஆகியவை வழங்கப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com