மத்திய பட்ஜெட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து இருக்கின்றனர். வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகளிடம் நிலவுகிறது.
அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் நெல், கரும்புக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படுமா? வறட்சி நிவாரணம் பற்றி அறிவிக்கப்படுமா? போன்ற பல எதிர்பார்ப்புகள் விவசாயிகள் இடையே நிலவுகிறது.
பட்ஜெட் குறித்து தொழிற்துறையினர் பலரும் சிறப்பு சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். அதன்படி, விவசாயிகள் வறட்சி நிவாரணம், நெல், கரும்புக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படும் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெல், கரும்புக்கு உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை 50% இருக்க வேண்டும் என்பது போன்ற பல சலுகைகைகளை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.