எட்டு கோடி பழைய ரூ.1000 திரும்பவரவில்லை: ரிசர்வ் வங்கி

எட்டு கோடி பழைய ரூ.1000 திரும்பவரவில்லை: ரிசர்வ் வங்கி
எட்டு கோடி பழைய ரூ.1000 திரும்பவரவில்லை: ரிசர்வ் வங்கி

15 லட்சத்து 28 ஆயிரம் கோடி மதிப்புள்ள பழைய 1000 மற்றும் 500 ரூபாய்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அதே சமயத்தில் 8 கோடியே 90 லட்சம் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பவரவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்கத்திற்கு பின் எவ்வளவு 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டது என்பது குறித்து பல்வேறு புள்ளிவிவரங்கள் உலா வந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. பணமதிப்பு நீக்கத்திற்கு பின் எட்டு கோடியே 90 லட்சம் எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தங்களிடம் திரும்பவரவில்லை இது புழக்கத்தில் இருந்த மொத்த 1000 ரூபாய் நோட்டுகளில் 1.4% என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com