உலகம்

ஜப்பான்: ஒலிம்பிக் ஜோதியை தண்ணீரால் அணைக்க முயன்ற பெண் கைது

EllusamyKarthik

ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைக்க முயன்ற புகாரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜப்பானின் மிட்டோ நகரத்தில் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாலை ஓரமாக நின்றிருந்த ஒரு பெண் திடீரென தன் கையில் இருந்த பொம்மை துப்பாக்கி மூலம் ஜோதியை நோக்கி தண்ணீரை பீய்ச்சியடித்து அதை அணைக்க முயற்சி செய்தார். 

அப்போது, டோக்யோவில் ஒலிம்பிக் நடத்தக் கூடாது என அவர் கோஷமிட்டதாகவும் தெரிகிறது. ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை உடனடியாக பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கொரோனா பரவும் என்பதால் ஒலிம்பிக்கை டோக்யோவில் நடத்த கடும் எதிர்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.