உலகம்

குளிர்கால ஒலிம்பிக்: ஜோதியை ஏந்திச் சென்ற கல்வான் மோதலில் காயம்பட்ட சீன ராணுவ வீரர்

EllusamyKarthik

குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவில் நாளை தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஒலிம்பிக் ஜோதியை இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான 2020 ஜூன் மாதத்தில் கல்வான் மோதலில் காயம்பட்ட சீன ராணுவ அதிகாரி ஏந்திச் சென்றுள்ளார்.

Qi Fabao என்ற பெயர் கொண்ட அந்த ராணுவ வீரர் புதன்கிழமை அன்று ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றுள்ளார் என்பது சீன அரசின் ஊடகம் உறுதி செய்துள்ளது. 

இந்த மோதலில் சீன தேச வீரர்கள் 4 பேர் மரணமடைந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் தொடர்ந்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.