உலகம்

இந்தோனேசியாவில் சீறி வரும் எரிமலை..

இந்தோனேசியாவில் சீறி வரும் எரிமலை..

webteam

இந்தோனேஷியாவின் பாலித் தீவில் உள்ள மிகப்பெரிய எரிமலை சீறத் தொடங்கியுள்ளது. நீராவி, மற்றும் புகை எரிமலையில் இருந்து வெளிப்பட்டு வருகிறது.

பாலித் தீவில் உள்ள எரிமலை எந்த நேரத்திலு‌ம் வெடிக்கும் நிலையில் இருப்பதால் எரிமலை அருகே உள்ள பகுதிகளில் வசித்து வரும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றியுள்ள 12 கிலோ மீட்டர் பகுதிகளுக்கு பொதுமக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமலை சீற்றத்தால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாலித் தீவில் சுற்றுலாவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ‌ இந்தோனேசியாவில் 130-க்கும் அதிகமான எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் அகுங் எரிமலை அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.