உலகம்

மக்கள் வேடிக்கை பார்க்க நடுத்தெருவில் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்: வீடியோ

Veeramani

சீனாவில் தெருவில் மக்கள் அனைவரும் பார்த்திருக்கும்போதே மனைவியை கணவன் அடித்துக்கொன்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சீனாவில்  தெருவில்  மக்கள்  அனைவரும் பார்க்கும்போதே, ஒரு நபர் தனது மனைவியை அடித்து கொலை செய்வதைக் காட்டும் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளன. "தாக்குதலில் ஈடுபட்ட அந்த சந்தேக நபர் காவலில் உள்ளார், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று போலீசார் தெரிவித்தனர். "அவர் ஒரு இயந்திர துப்பாக்கியை வைத்திருக்கவில்லை, ஆனால் ஏன் அவரை கட்டுப்படுத்த யாரும் முன்வரவில்லை?"  என்று ஒரு சமூக ஊடக பயனர் கூறினார்.

இந்த தாக்குதலின் படங்கள் முதலில் சமூக ஊடகங்களிலும், ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும் வெளிவந்தன, அவை மில்லியன் கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன. இதற்கான அனைவரும் கடுமையான கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர்.