உலகம்

இந்தியாவுக்கு அதே நிலைதான்.. ஆனால் பாகிஸ்தானுக்கு கருணை காட்டிய அமெரிக்கா..!

Veeramani

கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காரணமாக ”பயணம் செய்யக்கூடாத நாடுகள்” பட்டியலில் தொடர்ந்து இந்தியாவை வைத்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா, இப்போது பாகிஸ்தானுக்கான பயண ஆலோசனையை எளிதாக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து இந்தியாவை 'பயணம் செய்யாதீர்கள்' பட்டியலில் வைத்திருக்கிறது. COVID-19 தொற்றுநோய் மற்றும் பயங்கரவாதம் காரணமாக, பாகிஸ்தானுக்கான தனது பயண ஆலோசனையை 'பயணம் செய்யாதீர்கள்' எனும் லெவல் 4 பிரிவில் இருந்து, லெவல் 3 வகையான 'பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்' என்று திருத்தியுள்ளது அமெரிக்கா.

ஆனால் கோவிட் -19 தொற்று அதிகரித்துள்ளதால் ஆகஸ்ட் 6 ஆம் தேதி 'பயணம் செய்யாதீர்கள்' எனும் லெவல் 4 பிரிவில் இடம்பிடித்த இந்தியா, அதே லெவல் 4 பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது.