பிரீத் பராரா என்ற இந்தியரை அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.
ஒபாமா ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட 48 பேரையும் பதவி விலகுமாறு ட்ரம்ப் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. ஆனால் இதில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட பிரீத் பரோரா மட்டும் பதவி விலக மறுத்த நிலையில், அவரை வலுக்கட்டாயமாக அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. நியூயார்க்கின் தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞரான பராரா, ஊழலுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.