உலகம்

உலகத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆடு ! எவ்வளவு தெரியுமா ?

jagadeesh

ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஏலத்தில் செம்மறி ஆடு ஒன்று ரூ.3.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

ஸ்டாட்லாந்து நாட்டின் லானார்க்கில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றுள்ளது. இந்தச் சந்தையில் ஆடுகளை அதன் எடை மற்றும் பல்வேறு காரணிகள் கொண்டு பொது மக்களும் வியாபாரிகளும் ஏலம் எடுப்பார்கள். இந்தச் சந்தையை ஸ்காட்டிஷ் தேசியச் சந்தை நடத்தி வருகிறது. இந்தச் சந்தையில் இங்கிலாந்தைச் சேர்ந்த செம்மறி ஆடு பங்கேற்றது.

அந்த ஆட்டின் பெயர் "டபுள் டைமண்ட்". இந்த ஆடு இந்திய மதிப்பில் ரூ.3.5 கோடிக்கு ஏலமாகி விற்பனையானது. இதனையடுத்து உலகிலேயே டபுள் டைமண்ட் ஆடுதான் அதிக விலையில் விற்பனையான ஆடு என்ற சாதனையை படைத்துள்ளது.