உலகம்

ஓமன் கார் விபத்தில் ஐதராபாத் தம்பதி பலி: உயிருக்கு போராடும் குழந்தை!

webteam

ஓமனில் நடந்த கார் விபத்தில் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் குழந்தையுடன் உயிரிழந்தார். அவரது மற்றொரு குழந்தை உயிருக்குப் போராடி வருகிறது. 

ஐதராபாத்தை சேர்ந்தவர் கவுசல்லா அஸ்மத்துல்லா கான் (30). இவர் துபாயில் வசித்து வந்தார். இவர் மனைவி ஆயிஷா (29). இவர்களுக்கு 3 வயதில் ஹனியா என்ற மகளும் 8 மாத ஹம்சா கான் என்ற மகனும் இருந்தனர். நேற்று முன்தினம் காரில் ஓமன் சென்ற இவர்கள், துபாய்க்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 

(உயிருக்கு போராடும் குழந்தை)

சலாலா என்ற இடத்தின் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அஸ்மத்துல்லா சென்ற கார் கவிழ்ந்து உருண்டதில் அவர், மனைவி ஆயிஷா, மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த 3 வயது ஹனியா மருத்துவமனையில் சிகிசைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்திய தம்பதி குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம், அங்குள்ள இந்தியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.