உலகம்

''பிளவுவாதிகளின் தலைவர் மோடி'' - டைம் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை

''பிளவுவாதிகளின் தலைவர் மோடி'' - டைம் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை

webteam

அமெரிக்க செய்தி இதழான டைம், பிரதமர் மோடியின் படத்தை அட்டைப்படமாக வடிவமைத்து 'இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்' என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது 

அமெரிக்காவில் வெளியாகும்   டைம் இதழின் மே 20 ம் தேதி வரையிலான பதிப்பு வெளியானது. இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் என்ற தலைப்புடன் இதழின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி இடம்பிடித்திருந்தார். அதாவது ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசாங்கத்தில், மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டு இந்தக்கட்டுரை வெளியாகியுள்ளது.

ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச் சார்பின்மை, பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக்கட்டுரை குஜராத் கலவரத்தையும், பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்டுள்ளது.

2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ள டைம் இதழ், 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தியது. இந்நிலையில் இந்திய தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி வெளியாகியுள்ள கட்டுரையால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.