இயற்பியலுக்கான நோபல் பரிசு
இயற்பியலுக்கான நோபல் பரிசு pt
உலகம்

மின்னணு ஆற்றல் தொடர்பான ஆய்வு - இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு!

Jayashree A

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுத்தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளின் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கேட்டலின் கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேனுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பியர் அகோஸ்டினி (அமெரிக்கா), பேரன்க் கிராஸ்(ஜெர்மனி), அன்னே எல்'ஹுல்லியர் (ஸ்வீடன்) ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.