உலகம்

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் - நியூசிலாந்து அறிவிப்பு

JustinDurai
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றார். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டு வாரங்கள் நிறைவடைந்த பின்னரே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.