உலகம்

"நவாஸ் ஷெரிப்பை வெளிநாடு செல்ல அனுமதித்தது மிகப்பெரிய தவறு" - இம்ரான் கான்

Veeramani

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்ஃபை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தது தனது அரசு செய்த மிகப்பெரிய தவறு என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நவாஸ் ஷெரிப்பால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்று தனது அரசு கருதியதாக குறிப்பிட்டார். அவரை வெளிநாடு செல்ல அனுமதித்ததன் மூலம் தாங்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம் என்பதை இன்று ஒப்புக்கொள்வதாக இம்ரான் கூறினார்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நவாஸ் ஷெரிஃப் ஓராண்டுக்கும் குறைவாக சிறையிலிருந்த நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை லாகூர் உயர் நீதிமன்றம் நீக்கியது. இதனையடுத்து 2019ஆம் ஆண்டு இறுதியில் லண்டன் சென்ற நவாஸ் ஷெரிஃப் அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.