உலகம்

தாய்லாந்து: எண்ணெய் கசிவால் மாசடைந்த கடல்

கலிலுல்லா

தாய்லாந்து நாட்டில் ரயோங் மாகாணத்தில் கடலுக்குள் இருக்கும் எண்ணெய் குழாய் வெடித்து ஏற்பட்டுள்ள கசிவால் அப்பகுதியே கடுமையாக மாசடைந்துள்ளது.

ஸ்டார் பெட்ரோலியம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான குழாய் வெடித்ததால், அதிலிருந்து சுமார் 50 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கசிந்தது. அது சுமார் 47 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பரவியதால், கடல் நீர் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. தகுந்த முன்னெச்சரிக்கையுடன் எண்ணெய் கசிவை சரிசெய்யும் பணியில் கப்பற்படை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.