Texas man
Texas man  @catturd2, Twitter
உலகம்

துப்பாக்கியால் சுட்டு விளையாடிய நபர்.. தட்டிக்கேட்ட பக்கத்து வீட்டு நபரின் குடும்பமே சுட்டுக்கொலை!

Snehatara

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளா சான் ஜசிண்டோ நகரைச் சேர்ந்த 39 வயதான நபர், இரவு நேரத்தில் துப்பாக்கியால் சுட்டு விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது அண்டைவீட்டார் தூங்கமுடியாமல் அவதியடைந்ததால், அந்த நபரை அழைத்துக் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அண்டை வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில், சிறுவன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பிச்சென்ற சூழலில், காவல்துறையினர் அவரைத் தேடிவருகின்றனர்.