டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உலகின் நெம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்த்தை இழந்துள்ளார். இதற்கு காரணம் ஒரே நாளில் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் கண்ட வீழ்ச்சி தான் என தெரிந்துள்ளது. அதனால் ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்க் இழந்துள்ளார்.
“பணத்தை விட பிட்காயினே மேல்” என ட்வீட் மூலம் தெரிவித்திருந்தார் மஸ்க். அது தான் அவரது சரிவிற்கு காரணம் என கண்டறியப்பட்டுளள்து.
தற்போது 183.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ் 186.3 பில்லியன் சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.