உலகம்

உக்ரைன் நாட்டில் இருக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் - பெற்றோர் கோரிக்கை

கலிலுல்லா

உக்ரைன் நாட்டில் இருக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என சென்னையை சேர்ந்த பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்

உக்ரைன் நாட்டில் போர் அதிகரித்து வரும் நிலையில் அந்த இடத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வலுத்து இருக்கும் நிலையில் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதில் சென்னை மந்தைவெளியை சேர்ந்த மாணவி மாலினி 4 ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் மாணவியை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.