ஆப்கானிஸ்தானின் ஹெல்மெண்ட் மாகாணத்தில் தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மெண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர் கா நகரில் போலீஸ் தலைமையகம் அருகே ஏராளமான ராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது வெடிகுண்டு நிரம்பிய கார் ஒன்று ராணுவ வாகனத்தின் மீது மோதியது. இதில் காரும் ராணுவ வாகனங்களும் வெடித்து சிதறின. இதில் ராணுவ வீரர்கள் இரண்டு பேர், 2 பெண்கள், அந்த வழியாக சென்ற ஒரு சிறுமி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க படைகள் முகாமிட்டு தலிபன், அல்கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ஆப்கனுக்கு கூடுதலாக படைகள் அனுப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறியிருந்த நிலையில் தலிபான் பயங்கரவதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.