உலகம்

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதாக இலங்கை சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நிவேதா ஜெகராஜா

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலகவில்லை என்று அதிபர் அலுவலகம் கூறியிருந்த நிலையில், அவர் தற்போது பதவி விலகியதாக சபாநாயகர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா அறிவிப்பில் குழப்பங்கள் நிலவிய நிலையில் அவர் பதவி விலகியதை முறைப்படி அறிவித்துள்ளார் இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா. கோட்டாபய ராஜபக்ச, இலங்கையில் மக்கள் எதிர்ப்பால் தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாட்சியில் இடம் பெற்றிருந்த கடைசி ராஜபக்சேவும் தற்போது பதவி விலகியுள்ள இந்நிலையில், `கோட்டாபயவுக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கவில்லை’ என சிங்கப்பூர் அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் மாலத்தீவில் இருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் அங்கிருந்தும் வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.