சோமாலியாவின் தென்பகுதியில் உள்ள பகுதி தங்களை சோமாலிலாந்து என 1991ஆம் ஆண்டு அறிவித்துக்கொண்டு தனி நாடாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 60 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாட்டை, இஸ்ரேல் முதல் நாடாக அங்கீகரித்துள்ளது உலக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
இதன் பின்னணியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பெரிய வியூகம் இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது. காஸாவில் இருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்களை சோமாலிலாந்தில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் பின் காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிலாந்தை வளர்த்தெடுக்கும் போக்கு புதிய புவிசார் அரசியல் போருக்கும் வழி ஏற்படுத்தும் என்றும் அச்சங்கள் உள்ளன.
இந்த நிலையில், சோமாலிலாந்து என தனிப்பகுதி இல்லை என்றும் அது தங்கள் நாட்டின் ஓர் அங்கம் என்றும் சோமாலியா கூறியுள்ளது. மேலும், ஆப்பிரிக்க யூனியனும் அரபு நாடுகளும் இஸ்ரேலின் முடிவை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளன.
சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்திருக்கும் முடிவு குறித்து அரபு லீக் பொதுச் செயலாளர் அகமது அபூல் கெய்ட் கூறுகையில், "இஸ்ரேலின் இந்த முடிவு சர்வதேச சட்டத்தின் தெளிவான மீறல் மட்டுமின்றி நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை கொள்கையின் அப்பட்டமான மீறல்”என தெரிவித்துள்ளார்.