உலகம்

50 வருட குடும்ப ஆட்சிக்கு எதிராக போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயம்

webteam

டோகோவில் குடும்ப ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

தென் ஆப்பிரிக்க நாடான டோகோவில் 50 வருட குடும்ப ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் படுகாயம் அடைந்தனர். அதிபர் ஃபோர் ஞாசிங்பி-க்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவ்வப்போது தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அதிபரின் பதவி காலம் குறித்து கால நிர்ணயத்தை அறிவிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.