உலகம்

ஜப்பானில் கனமழை: மண்சரிவில் சிக்கியோரை தேடும் பணி தீவிரம்

Sinekadhara

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே அமைந்துள்ள அடாமியில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக்கொண்ட 19 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சுடுநீர் ஓடைகளுக்கு பெயர் பெற்ற அடாமி நகரில் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்டவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. மழை காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.