உலகம்

ஏமன் ஹவுதி படையினர் மீது சவுதி தாக்குதல்! எண்ணெய் கிடங்குகள் மீதான தாக்குதலுக்கு பதிலடி

EllusamyKarthik

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவளர்களான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது சவுதி. இந்த தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

ஹவுதி படையினர் சவுதியில் இரு எண்ணெய் கிடங்குகளை தாக்கியிருந்தது. இது மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி இதனை செய்துள்ளது. 

இந்த பதிலடி தாக்குதலில் தாக்குதலுக்கு உள்ளான இடங்களுக்கு அருகே இருந்த குடியிருப்பு பகுதிகள் ஆட்டம் கண்டதாகவும், குண்டு சத்தம் மிகவும் அதிகம் இருந்ததாகவும் அங்கு பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் வீடியோ காட்சிகள் இணையத்திலும் கசிந்துள்ளன. அதில் அந்த இடத்தில் தீப்பிழம்பு மற்றும் புகை படர்ந்திருந்ததை பார்க்க முடிவதாக தெரிவித்துள்ளனர்.