இந்தியா - பாகிஸ்தான் சண்டையை  அமெரிக்க அதிபர் ட்ரம்பே 
நிறுத்தியதாக, ரஷ்யா கூறியுள்ளது.  அமெரிக்க அதிபர் ட்ரம்பும் -ரஷ்ய அதிபர் புதினும், தொலைபேசி  வாயிலாக 70 நிமிடங்கள் 
உரையாடியுள்ளனர். 
இதுதொடர்பாக  ஊடகங்களுக்கு பேட்டியளித்த புதினின்  மூத்த உதவியாளர் யூரி உஷாகோவ்,  இருவரும் இந்தியா - பாகிஸ்தான்  இடையேயான ஆயுத மோதல் குறித்தும்  விவாதித்தாக தெரிவித்தார். இந்த  மோதல், ட்ரம்பின் தனிப்பட்ட  தலையீட்டால் நிறுத்தப்பட்டது எனவும்  குறிப்பிட்டார். பாகிஸ்தானுடான  சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவிற்கு  பங்கு இல்லை என, மத்திய அரசு  தொடர்ந்து கூறி வருவது 
குறிப்பிடத்தக்கது.