உலகம்

சர்வதேச சேவையை நிறுத்தும் ரஷ்யாவின் ஏரோப்ளோட் நிறுவனம்: உக்ரைனுடனான போர் எதிரொலி?

நிவேதா ஜெகராஜா

தொடர் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான சேவையை நிறுத்தப்போவதாக, ரஷ்யாவைச் சேர்ந்த ஏரோப்ளோட் விமான நிறுவனம் கூறியுள்ளது.

உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஏரோப்ளோட் நிறுவனம், பெலராஸ் தவிர அனைத்து சர்வதேச விமான சேவையையும் மார்ச் 8 ஆம் தேதி முதல் நிறுத்தவதாக அறிவித்துள்ளது.