உலகம்

அதிநவீன போர் விமானம் வாங்க இந்தியா திட்டம்

webteam

ரஷ்யாவின் புதிய தயாரிப்பான மிக்-35 ரக அதிநவீன போர் விமானங்களை வாங்க, இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இவ்விமானம் அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று துல்லியமாகத் தாக்குதல் நடத்தக் கூடியது ஆகும். ரஷ்யாவுடன் நட்பு பாராட்டும் 30க்கும் மேற்பட்ட நாடுகள் மிக்-35 ரக விமானத்தை வாங்கி ராணுவத்தில் சேர்க்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், மிக்-35 போர் விமானத்தை வாங்க இந்தியா, தங்கள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விமானத்தை விற்பது மட்டுமின்றி 40 ஆண்டுகளுக்கு அதை பராமரிக்கும் பொறுப்பையும் நிறுவனமே ஏற்கும் என மிக் விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டரசெங்கோ தெரிவித்துள்ளார்.

மிக் ரக போர் விமானங்களை, இந்தியா கடந்த 50 ஆண்டுகளாக வாங்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.