உலகம்

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது

webteam

உக்ரைனில் இருந்து கைப்பற்றிய நான்கு நகரங்களை அதிகாரப்பூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்வது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட ரஷ்யா முடிவு செய்துள்ளது.

அண்டை நாடான உக்ரைன், ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்நாட்டின் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. போரின் மூலம் உக்ரைனின் சில பகுதிகளையும் நகரங்களையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள நான்கு நகரங்களை தன் நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொள்வதற்கான அறிவிப்பை நாளை வெளியிடப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.