உலகம்

உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம்: தீவிர பயிற்சியில் வீரர்கள்

kaleelrahman

உக்ரைன் மீது போர் தொடுத்து, முழு நாட்டையும் கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், கருங்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் போர்க் கப்பலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் கடலோர பகுதிகளை கண்காணிப்பது, இலக்குகளை துல்லியமாக சுடுவது உள்ளிட்ட போர் பயிற்சிகளில் ரஷ்ய கடற்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், ரயில்கள் மூலம் பெலாரஸ் பகுதிக்கு கூடுதல் தளவாடங்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இதனால், உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.