உலகம்

திடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய

webteam

இலங்கை நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருந்த நிலையில், ஒருமாத காலத்திற்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்ச பதவியேற்றவுடன், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக மஹிந்தா ராஜபக்சே நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் நாளை தொடங்க இருந்தது. இந்தக் கூட்டத்தை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளி வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையில், இலங்கை நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் இன்று நள்ளிரவு முதல் முடித்து வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.