உலகம்

பிரணாப் முகர்ஜி இலங்கையின் அன்பு நண்பர் : மஹிந்த ராஜபக்‌சே

Veeramani

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, இலங்கையின் அன்பு நண்பர் என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி "இலங்கை மற்றும் அதன் மக்களின் அன்பான நண்பர்" என்று இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். " அவரின் மறைவு இந்திய பொதுமக்கள், இலங்கை மற்றும் முழு உலகத்தினரால் உணரப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜி தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானார்.