உலகம்

ரூ.9,800 பணத்தை சாப்பிட்ட செல்லநாய் - அதிர்ச்சியில் உரிமையாளர்

Sinekadhara

விசுவாசம் மிகுந்த குறும்புத்தனமிக்க செல்லப்பிராணிகள் நாய்கள். சில நேரங்களில் இவை நமக்கு பல சேதங்களைக்கூட வரவழைத்துவிடும். எதைப் பார்த்தாலும் எடுத்து சாப்பிடக் கூடிய நாய்க்குட்டி ஒன்று தனது முதலாளியின் சேமிப்பான சுமார் 100 டாலரை(ரூ.9,800) எடுத்து சாப்பிட்டிருக்கிறது.

ஐல் ஆஃப் மேன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸலின் ஹார்ன். அவர் தனது படுக்கையின் ஓரத்தில் சிறிய பானை ஒன்றை வைத்து அதில் பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வந்திருக்கிறார். அவரது செல்லப்பிராணியான பெக்கி சமீபத்தில் அந்த பானைக்குள் இருந்த அனைத்தையும் எடுத்து சாப்பிட்டு இருக்கிறது.

ஜோஸலின் வேலைமுடிந்து வீடு திரும்பியபோது, அவரது கணவர் ஆலன் பணத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து முதலில் நம்பவில்லை. ஆனால் கிழிந்த £ 20 நோட்டைக் கண்டதும் அந்த நம்பிக்கை போய்விட்டது. ஆனால் அதைத் தவிர வேறு துண்டுகள் எதுவும் கண்ணில் படவில்லை. உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெக்கி மறுநாள் மென்று விழுங்கிய பணம் அனைத்தையும் வெளியே கக்கிவிட்டதாக கூறியிருக்கிறார்.

அவற்றை கழுவி வரிசை எண்களை கண்டுபிடிக்க முடிந்தால் பணத்தை திரும்பப் பெறலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டதாக கூறியிருக்கிறார்.

பெக்கிக்கு பார்க்கும் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிடும் பழக்கம் இருப்பதாகவும், அதனால் எங்கு சென்றாலும் கூடவே வருவதாகவும் கூறுகிறார். மேலும் பெக்கியிடமிருந்து பொருட்களை காப்பாற்ற படுக்கையறையை எப்போதும் மூடி வைத்திருப்பாராம். ஆனால் அதையும் மீறி பெக்கி உள்ளே சென்று சேமிப்புப் பணத்தை நாசமாக்கிவிட்டது. இதைப் பார்த்து சிரிக்கவேண்டுமா அழவேண்டுமா என்று கூட தெரியவில்லை. எனக்கு பெக்கியை மிகவும் பிடிக்கும். அதற்காக என்னுடைய 100 டாலரை விழுங்கிவிட்டாள் என்று பரிதாபமாக கூறுகிறார்.