பெரு நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அரியவகை சிட்டுக்குருவிகள் மீட்கப்பட்டன.
பெரு நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அரக்யூபிகா பகுதியில் இருந்து பேருந்து மூலம் ஃபின்சஸ் (finches) எனப்படும் ஆரஞ்சு நிற சிட்டுக்குருவிகள் கடத்திச் செல்லப்பட்டன. 16 கூண்டுகளில் 581 சிட்டுக்குருவிகள் கடத்தப்பட்டன. தகவல் அறிந்த தேசிய வனவிலங்கு அதிகாரிகள் சிட்டுக்குருவிகளை மீட்டனர். குருவிகள் மீட்கப்பட்டபோது உணவு, தண்ணீர் இல்லாமல் பல இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் பாரன்கா பகுதியில் உள்ள உணவு விடுதியில் இரண்டு ஆமைகள் மற்றும் பென்குவின்கள் மீட்கப்பட்டன.