உலகம்

வெள்ளைப் போர்வை போர்த்திய பிரிட்டன்.. கடுமையான பனிப்பொழிவால் வீடுகளை படர்ந்த பனி!

webteam

பிரிட்டனின் வடக்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில், கடுமையான குளிருடன் பனிப்பொழிவு ஏற்படும் என, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 7 ஆம் தேதி முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 33.2 சென்டி மீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பனிபடர்ந்து காணப்படுகிறது. கடுமையான குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.