hormuz web
உலகம்

ஹார்முஸ் நீரிணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 115 கப்பல்கள், 2,500 மாலுமிகள்!

ஹார்முஸ் நீரிணையிலிருந்து 115 கப்பல்கள், 2,500 மாலுமிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஐஎம்ஓ தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

செவ்வாய்க்கிழமை முதல் ஹார்முஸ் நீரிணை வழியாக 115 கப்பல்களும் 2,500 மாலுமிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாரசீக வளைகுடாப் பகுதியிலிருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக சுமார் 115 கப்பல்களும் 2,500 மாலுமிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) தலைவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

Hormuz

ஓமன் வளைகுடாவில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 600 கப்பல்கள் மற்றும் 11,000 மாலுமிகளை வெளியேற்றும் முயற்சிகளை அந்த அமைப்பு வியாழக்கிழமையன்று தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

கடந்த மூன்றரை நாட்களில் 115 கப்பல்கள் வெளியேறியுள்ளன. இதன் மூலம் சுமார் 2,500 மாலுமிகள் இப்போது ஹார்முஸ் நீரிணையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச கடல்சார் அமைப்பின் டொமிங்குஸ் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.