உலகம்

காபூலில் ட்ரோன் தாக்குதல்- மன்னிப்பு கேட்ட அமெரிக்க ராணுவம்

கலிலுல்லா

காபூலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்ததற்கு, அமெரிக்க ராணுவ உயரதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார்.

காபூல் விமான நிலையத்தை குறிவைத்து, ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் கோரசான் பிரிவு பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 13அமெரிக்க வீரர்கள் உட்பட 175 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.எஸ்.கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில், பொதுமக்கள் பத்து பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். பதிலடி தாக்குதலின் போது, அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், அவர்களது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் கிடைத்ததால், ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது