உலகம்

பக்ரீத் பண்டிகை : எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் படை வீரர்கள்

EllusamyKarthik

பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். 

ராஜஸ்தானில் உள்ள பர்மார் எல்லை பகுதி, பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். 

இந்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.