உலகம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு

webteam

அமெரிக்காவின் ஒஹிவோவில் உள்ள மதுபான பாரில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் ஒஹிவோவில் செயல்பட்டு வந்த மதுபான பாரில் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தின. இந்தத் திடீர் தாக்குதலில் பாரில் இருந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நு‌ழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.