நேபாள திடீர் வெள்ளத்தில் சுற்றிலுமுள்ள கட்டடங்கள் தரைமட்டமான நிலையில், பச்சை நிற இரண்டு அடுக்கு வீடு ஒன்று மட்டும் சிறிதும் அசையாமல் கம்பீரமாக நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் திடீரெனப் பாய்ந்து வந்த பேரழிவு வெள்ளத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த பச்சை நிற வீட்டின் தரமான கட்டுமானமே அதில் இருந்த குடும்பத்தினரைக் காப்பாற்றியுள்ளது. இந்த ஆச்சரியக் காட்சியை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.