ஹகோடேட் கடல்
ஹகோடேட் கடல்  முகநூல்
உலகம்

ஜப்பான்: ஹகோடேட் கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய டன் கணக்கிலான லட்சக்கணக்கான மீன்கள்!

PT WEB

வடக்கு ஜப்பானின் ஹகோடேட் (Hakodate )கடற்கரையில், டன் கணக்கில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. ஹொக்காய்டோ தீவு பகுதியில் உள்ள  ஹகோடேட் கடல் பகுதியில், திடீரென லட்சக்கணக்கான மீன்கள் இறந்தன. இதனால் கடற்கரை முழுவதும் மீன்கள் மயமாக காட்சியளித்தது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கினர். எனினும் அவற்றை சாப்பிட வேண்டாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். திடீரென இவ்வளவு மீன்கள் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஃபுகுஷிமா அணு அலையில் இருந்து கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவாக இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு சென்ற மீன் ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆய்வு முடிவு வெளியான பிறகே, மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். கடந்த அக்டோபர் மாதம் ஃபுகுஷிமா அணு அலையில் இருந்து கழிவுநீர் கடலில் கலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.