உலகம்

மூன்றாவது பெண் குழந்தையை எதிர்ப்பார்க்கிறோம் ! - மார்க் ஜுக்கர்பெர்க்

Abinaya

பேஸ்புக் இணை நிறுவனரும், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அவரும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஜுக்கர்பெர்க்கும், தங்களது மூன்றாவது குழந்தையை பெற இருக்கிறார்கள்.

இதற்கான அறிவிப்பை மார்க் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில், ‘ மூன்றாவது பெண் குழந்தையை எதிர்பார்க்கிறோம்’ என்று அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பிரிசில்லாவுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட மார்க், " அடுத்த ஆண்டு மேக்ஸ் மற்றும் ஆகஸ்ட் ஒரு புதிய சகோதரியைப் பெற போகிறார்கள்” என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

 இவர்களுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு உள்ளனர். மார்க் மற்றும் பிரிசில்லாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.