உலகம்

டிக்-டாக் தளத்தில் தனது லவ் ஸ்டோரியை பகிர்ந்த இளம் பெண் - வைரலாகும் க்யூட் பதிவு

EllusamyKarthik

பெண் ஒருவர் தனது காதல் கதையை டிக்-டாக் தளத்தில் சின்ன சின்ன பதிவுகளாக பகிர்ந்துள்ளார். தற்போது அதன் காரணமாக அவர் வைரலாகியுள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஜாஸ்மின். அவர் சூப்பர் மார்கெட்டுக்கு சென்ற போது காதல் வயப்பட்டுள்ளார். அந்த காதல் அப்படியே கல்யாணம் வரை வந்து இப்போது குடும்பமாக வளர்ந்து நிற்கிறது. 

அப்படி என்ன நடந்தது?

“ஒருநாள் நான் ஷாப்பிங் செய்ய சூப்பர் மார்கெட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவரை சந்தித்தேன். அவர் அந்த சூப்பர் மார்கெட்டுக்கு வெளியில் தங்கியிருந்தார். அவருக்கு வீடு கூட இல்லை என தெரிந்தது. அதனால் நான் அவருக்கு நிதி உதவி அளிக்க முயன்றேன். ஆனால் அவர் வேண்டாம் என சொல்லி மறுத்துவிட்டார். பின்னர் நான் ஷாப்பிங் செய்ய கடைக்குள் சென்றுவிட்டேன். இருந்தாலும் அவரது முகம் எனது நினைவலைகளில் நீங்காமல் இருந்தது. 

நான் எனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். அப்போது அவர் எனக்கு உதவி செய்ய முன்வந்தார். எனது கையிலிருந்த பைகளை அவர் வாங்கிக் கொண்டு போய் டாக்சியில் வைத்தார்” என தொடங்குகிறார் ஜாஸ்மின்.

பின்னர், அன்றைய தினமே இருவரும் இரவு நேர உணவுக்காக உணவகம் சென்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் பேசி புரிந்துக் கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே அன்றைய இரவு பொழுதை மொபைல் போன் துணை கொண்டு சேட் செய்து பேசியுள்ளனர். 

தொடர்ந்து இருவரும் டேட்டிங் செல்ல அது அவர்கள் இருவரையும் இல்வாழ்க்கையில் இணைத்துள்ளது. இப்போது அவர்கள் இருவரும் இரண்டு குழந்தைகளுடன் அழகிய குடும்பத்தை உருவாக்கியுள்ளனர். ஜாஸ்மினின் கணவர் இப்போது தனக்கென ஒரு வேலையை தேடிக் கொண்டுள்ளார். அவர் பெயர் மெக்காலே முர்ச்சி என தெரிகிறது. இருவரும் கனடாவை சேர்ந்தவர்கள். 

“அவர் இல்லாமல் எனது வாழ்க்கையே இல்லை” என தனது காதல் கணவரை நினைத்து உருகுகிறார் ஜாஸ்மின்.