உலகம்

விளையாடிக் கொண்டிருந்த பூங்கா காப்பாளரின் விரலை பதம் பார்த்த சிங்கம்!

Sinekadhara

ஜமைக்காவில் சிங்கம் ஒன்று உயிரியல் பூங்கா காப்பாளரின் விரலை கடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

சிங்கத்துக்கு வழக்கமாக உணவளிக்கும் காப்பாளர், அதனுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கோபத்தில் இருந்த சிங்கம் அவரது விரலை கடித்தது. ஆனால் சுற்றியிருந்தவர்கள் சிங்கத்துடன் விளையாடி கொண்டிருப்பதாகவே நினைத்து வீடியோ எடுத்துள்ளனர். பூங்கா காப்பாளர் மயங்கி விழுந்த பிறகே, சிங்கம் அவரின் விரலை கடித்தது தெரியவந்துள்ளது.